நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் நாளை (மே 14) உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை காலை 9 மணிக்கு 'கருப்பு' திரைப்படத்தின் சிறப்பு காட்சியைத் திரையிட அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. விடுமுறை தினம் அல்லாத போதிலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்ததற்காக தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு படக்குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக படக்குழு சார்பில் பிரத்யேக நன்றி போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யா ரசிகர்கள் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரையரங்குகள் முன்பு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.

